அரசர் தொட்டு
ஆங்கிலேயன் வரை
அகிலமே கற்றறிந்தது
அரசமரத்தடியில் தான்
பகலவன் பார்த்து
மணல்களின் பதம்பார்த்து
மெல்ல ஊர்ந்து
நண்பனோடு இடம்பெயர்ந்து
காகையின் கரைச்சலோடு
விமானங்களின் இரைச்சலோடு
அரசிலை தழுவலோடு
ஆசானின் வாய்ச்சொல்லை
நுனிவிரல் தயாராகி
மண்ணில் எழுதுக்கோலமிடும்
சுவரில்லா சித்திரமாய்
பண்பாட்டின் வகுப்பறை
நாற்காலிகள் சூழ
மரங்களோ மரப்பலகையாய்
மேஜைகளாய் கதவுகளாய்
மரத்தடி வகுப்பிடம்
இன்று மரங்களின் கல்லரையாய்
இயற்கையை தடுத்து
செயற்கையை செலுத்தி
வசதிகளும் வாய்ப்புகளும்
நுனிவிரல் அல்ல
மணல்களும் அல்ல
விரல்களின் நடுவில்
மைகொண்ட ஆணி
அவைகள் முத்தமிடும்
புத்தகத்தாள்கள்
இப்படி
கட்டிட கருவறையில்
கண்சிமிட்டும் இக்கால
-வகுப்பறைகள்